News January 13, 2026
காங்கிரஸ் தான் தமிழர்களை அவமதித்தது: பாஜக

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஜன நாயகன் குறித்த ராகுல் காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் CR கேசவன் கூறியுள்ளார். மேலும் அன்றைய காங்கிரஸ் அரசு தான், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று இழிவாகக் கூறி, தமிழர்களின் உணர்வை அவமதித்தது என்றும், தற்போது திமுக-காங்., கூட்டணி பிளவுபட்டு வருவதை திசைதிருப்பவே ராகுல் அப்பட்டமாக பொய் சொல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
திருச்சி, தஞ்சைக்கு வருகை தரும் PM மோடி

வரும் மார்ச்சில் PM மோடி, 3 முறை TN வரவுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மார்ச் 6-ம் தேதி வேலூர் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் மார்ச் 11-ல் திருச்சி, தஞ்சை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி PM மோடியின் அடுத்தடுத்த தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
News February 18, 2026
Election: தமிழகம் வருகிறார் ஞானேஷ் குமார்

CEC ஞானேஷ் குமார், பிப்.26, 27-ல் தமிழகம் வரவிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மாநில தேர்தல் அதிகாரிகள், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
News February 18, 2026
ராகுல் காந்தி ஆபத்தானவர்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானவர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ராகுல் காந்தி தேச விரோத சக்திகளான நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்திப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், ராகுல் வெளிநாட்டில் <<14831061>>ஜார்ஜ் சோரோஸ்<<>> போன்ற நபர்களை சந்தித்து, நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.


