News January 13, 2026
தேசிய டேக்வாண்டோ போட்டி – புதுச்சேரி அணி பங்கேர்ப்பு

டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகள் இன்றிலிருந்து 3 நாட்கள் புதுதில்லியில் நடைபெறுகிறது. புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தலைமைப் பயிற்சியாளர் பகவத்சிங், பயிற்சியாளர்கள் மிஸ்ரா, தேவானந்த் மற்றும் நடுவர் ஹரிஹரன் உடன் செல்கின்றனர்.
Similar News
News February 3, 2026
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில் 2026–27 கல்வியாண்டிற்கான 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என பள்ளி முதல்வர் கண்ணதாசன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனுமதி சீட்டுடன் நேரத்தில் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 3, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News February 3, 2026
புதுவை: நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட அமைதி நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் பெண்மணி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த ஒரு பவுன் தங்க நகையை கண்டெடுத்த அவர், சற்றும் யோசிக்காமல், அந்த நகையை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயலைப் பாராட்டும் விதமாக, காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவருக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தார்.


