News May 5, 2024
சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 22, 2025
பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பேரூரில் அரசு ஐடிஐ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு நடப்பாண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேதி ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கோவை: இதை செய்தால் புகார் அளிக்கத் தயங்காதீர்கள்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதே போல் உங்களிடம் ஏதேனும் அரசு அதிகாரிகள் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கேட்டல் 0422-2449550 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த முக்கிய எண்ணை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.