News January 13, 2026
மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 27, 2026
மதுரை: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News January 27, 2026
மதுரையில் டிஜிட்டல் அரஸ்ட்; போலீசார் விசாரணை

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் சென்னை போலீஸ் தலைமைகத்திலிருந்து எஸ்ஐ அருண்குமார் பேசுவதாகவும், மும்பை தீவிரவாத தடுப்புக் குழுவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து, காளமேகத்திற்கு விழிப்புணர்வு இருந்ததால் சுதாரித்துக் கொண்டார். இதுக்குறித்து கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை.


