News January 13, 2026

ரேஷனில் முக்கிய மாற்றம்.. ரத்தாகும் ALERT!

image

TN அரசு அறிக்கையின் படி, 2025-ல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அரசு பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 1. அனைத்து அட்டைதாரர்களுக்கும் e-KYC கட்டாயம். 2. ஆதார் இணைப்பு அவசியம்; இணைக்கப்படாத அட்டைகள் 2026 மார்ச் 31-க்குள் செயலிழக்கும். எனவே, உங்கள் ரேஷன் அட்டை ரத்தாகாமல் இருக்க மேற்படி சொன்ன விஷயங்களை செய்து முடிங்க மக்களே. SHARE.

Similar News

News January 25, 2026

போலீஸ், பஸ் கண்டக்டர் விசில் வைத்திருக்க முடியாது: KAS

image

TN-ல் எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் ஒலிப்பதாக செங்கோட்டையன்(KAS) தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இனிவரும் நாள்களில் போலீஸ், பஸ் கண்டக்டர்கள் விசில் வைத்திருக்க தடை வரலாம் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவை ஒழிப்பதாக கூறிவிட்டு நபர் ஒருவருக்கு ₹1,000 கொடுத்து சில நாள்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை நடத்தியதாக NDA கூட்டத்தை சாடினார்.

News January 25, 2026

WhatsApp மூலம் கேஸ் புக்கிங்.. இதை செய்யுங்க

image

வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால், WhatsApp மூலமும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அது எப்படி என தெரிந்து கொள்ளலாம். HP நிறுவனம் எனில், நீங்கள் அந்நிறுவனத்திடம் கொடுத்த செல்போன் எண்ணில் இருந்து, 92222 01122 என்ற எண்ணுக்கு Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும். அதுபோல, Indane எனில் 75888 88824 எண்ணுக்கும், Bharat Gas எனில் 1800224344 எண்ணுக்கும் மெசேஜ் அனுப்பி கேஸ் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News January 25, 2026

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

image

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பேன் என பிரேமலதா கூறியுள்ளார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த அவர், முருகன் அருளால் தாங்கள் சேரும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியில் இணைவோம் என்றும் பிரேமலதா கூறினார். ராமதாஸ், பிரேமலதா, கிருஷ்ணசாமி ஆகியோர் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!