News May 5, 2024
ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மரண வாக்குமூலம் தொடர்பான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 1, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்’.. காதல் வலியால் சோகம்

‘இனி என்னால் தாங்கி கொள்ள முடியாது. அம்மா, நான் சாகப்போறேன். எனது சாவிற்கு அவளின் குடும்பமே காரணம்’. உ.பி. மதுராவில் தற்கொலை செய்த புகைப்பட கலைஞர் உதித்தின்(25) கடைசி வரிகள் இவை. 2 ஆண்டுகளாக காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட மோதலால் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மயங்கி விழுந்தது பெரும் சோகம். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.
News September 1, 2025
திமுக தண்டனையிலிருந்து தப்ப முடியாது : அன்புமணி

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மை பணியாளர்களை திமுக அரசு ஏமாற்றுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் பணியாளர்களுக்கு குறைந்தது ₹23,000 வழங்க HC உத்தரவிட்ட நிலையில், எழுதப் படிக்க தெரியாத அவர்களிடம் ₹16,950 ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனம் கையெழுத்து வாங்கியதாக சாடியுள்ளார். உழைப்பு சுரண்டலுக்கு துணை போயுள்ள திமுக தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
விந்து நிறமாற்றம்: ஆண்களே, எச்சரிக்கை!

விழிப்புணர்வு இருந்தால், நோய்களை முன்பே அறியலாம். விந்து திரவத்தின் நிறமாற்றம் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும்: *வெண்மை(அ) கிரே: இது இயல்பான, ஆரோக்கியமான நிலை. உணவு, நீரேற்றம் பொறுத்து சிறிது மாறுபடலாம். *பச்சை: பாக்டீரியா தொற்று, பால்வினை நோய் அறிகுறி. *மஞ்சள்- சிறுநீர் கலந்த அறிகுறி. துர்நாற்றம், அசவுகரியம். *சிவப்பு: ரத்தம் கலந்த அறிகுறி. இயல்புக்கு மாறான அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை அணுகவும்.