News January 13, 2026
தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 18, 2026
தூத்துக்குடி: இளம் பெண்ணுக்கு சரமாரியாக கத்திக்குத்து

கயத்தாறில் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு வசித்து வருபவர் இசக்கிராஜா(27) கூலித்தொழிலாளி, மனைவி இசக்கியம்மாள்(26), வீட்டில் தனியாக இருந்து மாவரைத்து கொண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மகாராஜன்(50) குடிபோதையில் இளம் பெண்னை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News February 17, 2026
தூத்துக்குடி: இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
News February 17, 2026
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வயது வரம்பு உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க வயது வரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 19 பிப்ரவரி மாலை 5.45 மணிக்குள் thoothukudi.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


