News January 12, 2026
தீ பற்றிய கார் – விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர்!

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே, மூங்கில் பாடி சாலை நுழைவு வாயிலில் ஒருவர் காரை நிறுத்திவிட்டு பொருள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்த கார் சிலிண்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த காரின் அடியில் திடீர் தீ ஏற்பட்டு எரிந்துள்ளது. அப்போது ரோந்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை அதைக் கண்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தார். அவருடன் போலீசார் பொதுமக்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
Similar News
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


