News January 12, 2026
மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டு பழமையான கோயில்!

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில் தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News January 30, 2026
மயிலாடுதுறை: மகளிருக்கு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு வலைப்பழுது பார்த்தல், வலைகளை மறுசுழற்சி செய்தல், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04364-271455, 7904428026, 6369864872 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
மயிலாடுதுறை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, Aadhaar<
News January 30, 2026
மயிலாடுதுறை: மாடியில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கீழபட்டமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன்(40). இவர் கடந்த 18ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் செல்போனில் பேசியபடி நடந்துள்ளார். அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


