News January 12, 2026
BREAKING: ‘ஜன நாயகன்’.. விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி

<<18835502>>’ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ்<<>> விவகாரத்தில், படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. <<18806489>>தணிக்கை சான்றிதழ் சிக்கல்<<>> தீரும் என எதிர்பார்த்த விஜய்க்கு, சென்சார் போர்டின் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Similar News
News February 5, 2026
அரசியலில் இருந்து விலகலா.. அண்ணாமலை தெரிவித்தார்

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, அரசியலிலிருந்தே விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஒருபோதும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்துள்ளார். தேர்தல் பணி விலகலுக்கு தந்தையைக் கவனிக்க என காரணம் கூறினாலும், 6 தொகுதிகளுக்குள் அவரை அடக்கியதும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் தான் விலகலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
News February 5, 2026
காங்கிரஸுக்கு அதிரடி Offer-களை வழங்கினாரா விஜய்?

தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தாலும், திரை மறைவில் தவெக உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக உடன் கூட்டணி அமைக்க விஜய் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி இருப்பதாக பேசப்படுகிறது. கூட்டணிக்கு வந்தால் 70 தொகுதிகள், 1 DCM பதவி, 6 அமைச்சர்கள் பதவி, லோக்சபா தேர்தலில் 28 தொகுதியை தவெக தருவதாக உறுதியளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
News February 5, 2026
போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் செங்கோட்டையன்

சிட்டிங் MLA-வாக இருந்த கோபி தொகுதியிலேயே (ஈரோடு) போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்க உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தை தவெக தான ஆளப்போகிறது என்ற அவர், TN-ல் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் பெயர் ஒலித்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.


