News January 12, 2026
JUST IN: இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான திருவாடனை, இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 3, 2026
ராம்நாடு: 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நேற்று, பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
News April 3, 2026
ராம்நாடு: ஈரான் தாக்குதலில் பலியான இளைஞர் உடல் தகனம்

முதுகுளத்தூர் அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 36). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் சந்தான செல்வத்தின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
News April 3, 2026
ராம்நாடு: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்.!

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


