News January 12, 2026
BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
குமரி: சுசீந்திரம் அருகே ஒருவர் தற்கொலை

சுசீந்திரம் அருகே சின்னணைந்தான் விளையைச் சேர்ந்தவர் பிரபு (42). திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. இவர் திருமணமாகாத மன வருத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
குமரி: கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

குற்றியாணி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (44). ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். கோதையாறு இடது கரை கால்வாயில் குளிப்பதற்காக சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை தேடிப் பார்த்த போது கால்வாயில் சடலமாக மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை.
News January 26, 2026
குமரி: திமுக நிர்வாகி & குடும்பத்தினர் கைது

குமரி, கருங்கல் பகுதியில் உள்ள ஷார்லின் சேம் கவரிங் கடையில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண், கடை ஊழியரின் கவனத்தை திருப்பி ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கமுலாம் பூசிய நகைகளை திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தி.மு.க. பேரூராட்சி துணைத்தலைவி பால்தங்கம், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர். இதில் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


