News May 5, 2024

குழந்தையை கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு

image

சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்ததால் அதன் காலை வெட்டி கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார் அந்த செவிலியர். குழந்தையின் காலை வெட்டும்போது செவிலியருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News September 1, 2025

SPACE: விண்வெளியில் குழந்தை பெற்றெடுக்க முடியுமா?

image

விண்வெளியில் குழந்தை பெறுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதே உண்மை. விண்வெளியில் ஈர்ப்பு விசை மிக மிக குறைவாக இருப்பதும், காஸ்மிக் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதும் இதற்கு காரணங்களாகும். ஈர்ப்பு விசை இல்லாதது பிரசவ செயல்பாட்டை பாதிக்கும். காஸ்மிக் கதிர்வீச்சோ நமது DNA-களை சேதமாக்குவதுடன், செல்களிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனினும், இதை சமாளிக்கும் டெக்னாலஜி விரைவில் சாத்தியமாகும் என நம்பலாம்.

News September 1, 2025

திமுக கூட்டணியில் தேமுதிக ?

image

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்ய சபா சீட் தராததால் ஏமாற்றத்தில் உள்ள பிரேமலதா EPS-ஐ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட தேமுதிக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 தொகுதிகளை வழங்க திமுக தயார் எனவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இது உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.

News September 1, 2025

இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க ‘4’ டிப்ஸ்..

image

*வீட்டின் EB பில்லில் கவனமாக இருங்க. தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவி Off செய்யுங்கள்.
*அதிகமாக சமையல் பொருள்களை கொண்டு சமைத்து, அதனை யாரும் சாப்பிடாமல் வீணடிக்க வேண்டாம். *சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது பல நேரங்களில் உதவும்.
*பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருள்களோ வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப வாங்குங்கள். SHARE IT.

error: Content is protected !!