News January 12, 2026
அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
Similar News
News January 27, 2026
அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு இடமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…
News January 27, 2026
அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தைக்குடம், ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
அரியலூர்: பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வேம்பு. இவர் காரைக்குறிச்சியில் இருந்து தா.பழூர் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த 2 சக்கர வாகனம் மோதியத்தில், படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வேம்பு, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


