News January 12, 2026
திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்

திருவாரூர், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சரவணன் (42). இவர் திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த மாதம் 26-ம் தேதி விஷத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவாரூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
திருவாரூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
திருவாரூர்: சிறையில் கைதி திடீர் உயிரிழப்பு

மன்னார்குடி அடுத்த வடுவூரை சேர்ந்தவர் உலகநீதி (58). இவர் வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


