News January 12, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று(ஜன.11) பரமநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். அதில், அவர் தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த முருகன்(37) என்பதும், பல்வேறு பெண்களிடம் சுமார் 11.5 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர்.
Similar News
News February 3, 2026
கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News February 3, 2026
போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சியில் இன்று புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வந்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் சுற்றுலாத்துறை மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News February 3, 2026
கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


