News January 12, 2026

சேலம் அருகே சோகம்: தாய், குழந்தை மரணம்!

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

சேலம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சேலத்தில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News February 12, 2026

சேலம்: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து நீங்கள் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி, அவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 12, 2026

சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!