News January 12, 2026
தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News February 19, 2026
கரூர்: உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நாணப்பரப்பு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, 20.02.2026 (வெள்ளிக்கிழமை) நாளை புகழூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
கரூர்: சத்துணவு மையங்களில் காலியிடங்கள் அறிவிப்பு!

கரூர் மாவட்டப் பள்ளிகளில் செயல்பட்டும் சத்துணவு சமையல் மையங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 24 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இவை வட்டாரம் வாரியாக நடைபெறும். இந்தப் பணிக்கு 21 முதல் 40 வயது வரை பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் https//karur.nic.in/ என்ற இணைய தளத்தில் கிடைக்கும். கடைசித் தேதி: 27.02.2026. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
கரூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க


