News January 12, 2026
புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
POWER CUT: ஈரோட்டில் இங்கு மின்தடை

ஈரோட்டில் இன்று (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. கவுந்தப்பாடி, சந்திராபுரம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சசமடை,சிங்காநல்லூர், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஆகும். SHAREIT
News January 29, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் 14-02-2026 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
News January 29, 2026
ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.


