News May 5, 2024
நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஆஜர்

தாம்பரம் அருகே ரயிலில் ₹4கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஜெய்ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கெனவே 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
விவாகரத்து செய்தால் ₹27 கோடியா?

கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் ₹27 கோடி தருவதாக, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் US-ஐ சேர்ந்த CEO தமீர் போலெக் டீல் பேசியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி விவாகரத்து செய்த அப்பெண்ணுக்கு சொன்ன தொகையுடன், ₹13 கோடி மதிப்பிலான வீட்டையும் போலெக் வழங்கியுள்ளாராம். உலகம் முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளான நிலையில், பணம் பத்தும் செய்யும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
News February 2, 2026
விடாப்பிடி காங்கிரஸ்… மறுக்கும் திமுக

‘கூட்டணி ஆட்சி’ என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற காங்., இந்த முறை 35 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாம். ஆனால், கூட்டணி ஆட்சி, 35 தொகுதிகள் என்ற காங்கிரஸின் கோரிக்கைகளை நிராகரித்த திமுக தலைமை, கடந்த தேர்தலை விட கூடுதலாக 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 2, 2026
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. TWIST

2019-ல் இறந்தவர் இப்போது போலீஸில் புகார் அளித்திருக்கிறார். என்ன, குழப்பமாக இருக்கிறதா? சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுசீலா(71) இறந்துவிட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழை பெற்ற அவரது மகன் அல்போன்ஸ் ராஜ், தாயின் சொத்துக்களை ₹34 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த விவரம் தற்போதுதான் சுசீலாவிற்கு தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரின்பேரில் அல்போன்ஸ் ராஜை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.


