News January 11, 2026
42.82 மெட்ரிக் டன் கழிவுகள் எரிப்பு

சென்னை மாநகராட்சியில் வீடுகளில் சேரும் பழைய சோஃபா, மெத்தை மற்றும் மரச்சாமான்கள் போன்ற கழிவுகளைச் சனிக்கிழமைதோறும் அகற்றும் திட்டத்தின் கீழ், இதுவரை 1,769 பேரிடமிருந்து 664.68 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (ஜன. 10) மட்டும் 42.82 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டன.
Similar News
News February 4, 2026
தனியார் விடுதியில் பெணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: போரூர் தனியார் தங்கும் விடுதியில், வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த வெளிமாநில பெண்ணிடம் விடுதியின் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று(பிப்.4) போலீசார், உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெளிமாநில பெண் உடமைகள் அனைத்தும் உரிமையாளர் பறித்து கொண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News February 4, 2026
சைதாப்பேட்டையில் வாலிபர் போக்சோவில் கைது!

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், சக்திவேல் (31) என்பவர் பந்தல் பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை மகளிர் போலீசார், சக்திவேலை நேற்று(பிப்.3) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News February 4, 2026
2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ரூ.10.354 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.10.354 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில், OMR மேம்பால பாதையில், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள், தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ரூ.63.246 கோடி மதிப்பிலான, இந்த திட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகவலை சென்னை மெட்ரோ தலைமையகம் இன்று (பிப்.04) அறிவித்துள்ளது.


