News January 11, 2026

அரக்கோணம்: தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்!

image

மோசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று (ஜனவரி 11) ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

ராணிப்பேட்டை: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

image

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 30, 2026

ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026 – 27 கல்வியாண்டுக்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடக்கம், அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்க இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, பிப்.28ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும்.

error: Content is protected !!