News January 11, 2026
ஓசூர்: ஆன்லைன் லோன் செயலியால் வந்த வினை!

ஓசூர், ராயக்கோட்டை ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் ராணி (57) இவர் நேற்று தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர், அவரிடம் இருந்த நகைகளை பறித்து சென்றுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் விசாரித்த போலீஸ், திருப்பூரை சேர்ந்த தீபன்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் பெற்று, அதனை அடைக்க திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
Similar News
News January 27, 2026
கிருஷ்ணகிரியில் ஷாக்; ரோட்டில் கத்தியோடு நின்ற நபர்!

போச்சம்பள்ளி அடுத்த மடத்தனுர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (61). இவர் நேற்று (ஜன.26) மாலை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கீழ் மைலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (46) வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.5,100 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 27, 2026
கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
கிருஷ்ணகிரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!


