News January 11, 2026

சென்னையில் ரூ.1 லட்சம் அபராதம்!

image

சென்னையில் மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News February 3, 2026

சென்னையில் தொடரும் கொடூரம்!

image

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 10ம் வகுப்பு மாணவிக்கு வாலிபர் ஒருவர் தவறான செய்கையின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரியும் கௌசல்யாவின் கணவர் பூபாலன், மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், தவறான செய்கை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பூபாலனை நேற்று கைது செய்தனர்.

News February 3, 2026

சென்னை: நொடி பொழுதில் கோரம்; தலைநசுங்கி பலி

image

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

News February 3, 2026

கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

image

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!