News January 11, 2026
நாகை அருகே அதிர்ச்சி: 200 கிலோ கஞ்சா பறிமுதல்

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
நாகை: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <
News February 6, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிவாய்ந்த இளைஞர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News February 6, 2026
நாகை: ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள மாடக்கோவில்களான அம்பல்-பிரம்மபுரீஸ்வரர், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர், சிக்கல் நவநீதேஸ்வரர், வலிவலம் மனத்துணை நாதர், தேவூர் தேவபுரீஸ்வரர், கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில் ஆகியவற்றிற்கு ஒருநாள் மரபு சுற்றுலா பயணம் வரும் பிப்.22ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73958 89645 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


