News January 11, 2026
செங்கல்பட்டு: துடிதுடித்து பலி!

செங்கல்பட்டு அடுத்த வல்லத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரூபாவதி (56), நேற்று முன்தினம் இரவு நெம்மேலி பகுதியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது , அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
செங்கை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News February 14, 2026
செங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
செங்கை: 50 பேர் அதிரடி கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்களில் உதவித்தொகை யாக ரூ.6 ஆயிரம், கடுமையானவர்களுக்கு ரூ.10ஆயிரம், படுக்கையில் உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதே போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி மதுராந்தகம் தேரடி தெருவில் மாற்றுத் திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாநிலம் தழுவிய 4வது நாளாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.


