News January 11, 2026
கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசென்ஜித் சன்ரா(32). இவர் கோவையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நிறுவனத்திற்கு வராததால், சக ஊழியர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்படி இறந்தார் என விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
கோவை: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
கோவையில் விபத்து.. பரிதாப பலி!

கோவை எட்டிமடை – மதுக்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.


