News January 10, 2026
கிருஷ்ணகிரி: ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்க CLICK HERE

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, கிருஷ்ணகிரி எஸ்.பி: 04343239600, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
பிப்.2, 3-இல் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள் விநியோகம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
கிருஷ்ணகிரி அருகே பெண் மர்ம மரணம்!

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (60), ராணி (52) தம்பதி. இருவரும் கட்டுமான பணி செய்து வரும் நிலையில், குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்தி நிலையில், நேற்று குப்புசாமி எழுந்து பார்த்த போது ராணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவா் குப்புசாமியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


