News January 10, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மானிய விலையில் ஒரு எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,250 வழங்கப்பட உள்ளது. மேலும், தகவலுக்கு வட்டார தொட்டக்கலை உதவி இயக்குனரை அனுகவும்.
Similar News
News January 27, 2026
பெரம்பலூர் ஆட்சியருக்கு ஆளுநர் ரவி பாராட்டு

முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து சென்னை ராஜ்பவனில் நேற்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
News January 27, 2026
பெரம்பலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 27, 2026
பெரம்பலூரில் என்கவுண்டர்! மேலும் 6 பேர் கைது

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தப்பி ஓட முயன்றதால், கொட்டு ராஜா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், வெள்ளை காளியை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


