News January 10, 2026
கடலூர்: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவரது மனைவி கடந்த 4-ம் தேதி இறந்து போனார். தாயார் இறந்துபோன மனவேதனையில் இருந்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ்குமார் (33) நேற்று தூக்குபோட்டு கொண்டார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 9, 2026
கடலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
கடலூர்: குட்டையில் மிதந்த பிணம்

கடலூர் முதுநகர் அடுத்த சுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (63). மீனவரான இவர் கடந்த மாதம் 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடலூர் செல்லங்குப்பம் மீன்பிடி குட்டையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பிணமாக மிதந்துள்ளார். தகவலறிந்த முதுநகர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி, தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரித்து வருகின்றனர்.


