News May 4, 2024

குஜராத்தில் இருந்து உ.பி.,க்கு தப்பி ஓடிவந்தவர் மோடி

image

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து விமர்சிக்க பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். மோடி ஏன் குஜராத்தில் இருந்து வந்து வாரணாசியில் போட்டியிடுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், அவரே உ.பி.,க்கு தப்பி ஓடிவந்தவர்தான் என்றார். தற்போது, தோல்வி பயத்தில் இருக்கும் அவர், பொய்யை மட்டுமே பேசிவருகிறார் எனக் கூறியுள்ளார்.

Similar News

News August 31, 2025

ராசி பலன்கள் (31.08.2025)

image

➤ மேஷம் – தாமதம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – அச்சம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – நஷ்டம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஊக்கம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – உற்சாகம்.

News August 30, 2025

இந்திய ராணுவத்தில் புதிய கமாண்டோ படை

image

இந்திய ராணுவத்தில் ‘பைரவ்’ எனும் புதிய கமாண்டோ படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாட்படையில் இருக்கும் வீரர்களில் 250 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, நவீன ஆயுதங்கள், டிரோன்கள் வழங்கப்பட்டு இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் அக்.31-ம் தேதிக்குள் 5 யூனிட் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்பட உள்ளனர்.

News August 30, 2025

USA-ன் 50% வரி: PM மோடிக்கு EPS கடிதம்

image

USA-ன் 50% வரியால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் கோரி PM மோடிக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். ஏற்றுமதி இழப்பை சமாளிக்க இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பருத்தி நூலின் வரியில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உற்பத்தியாளர்களின் நிலுவையில் உள்ள கடன்களுக்கு வட்டியில் தளர்வு அளிக்கவும் கோரியுள்ளார்.

error: Content is protected !!