News May 4, 2024

தேனி: இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

image

தேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடி அருகே ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த தனவந்தன் (26). இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகமான முதலீடு செய்ய பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு, ரூ.53 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

Similar News

News November 5, 2025

தேனி: வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (44). இவரது மகளுக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக கூறி வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (42), அவரது நண்பரான கரூர் முருகேசன் (48) ஆகியோர் 2022-ல் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியகுளம் போலீசார் ராஜகோபால், முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 5, 2025

தேனி: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)

2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)

3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)

4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)

5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

தேனி: 1389 பேரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்

image

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நேரடியாகவும், போலீசார் பரிந்துரையிலும் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 மாதங்களில் மாவட்டத்தில் 1389 பேரின் ஓட்டுநர் உரிமங்களை 3 முதல் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!