News January 10, 2026
நெல்லை: வாலிபர் உயிரை பறித்த பாதாம் ஜூஸ்

நெல்லை, பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கேசவ ராஜா(32). இவர் கார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாதாம் (கீர்) ஜூஸை எடுத்து குடித்தார். இதனால் அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். கேசவ ராஜா இறந்தது குறித்து நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 1, 2026
நெல்லை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
நெல்லையில் வழிப்பறி ஆசாமி கைது

நெல்லை பேட்டையை சேர்ந்த சங்கர நாராயணன் (38) என்பவர் வழுக்கு ஓடை பாலம் அருகே நடந்து சென்றபோது டவுன் பழனிதெருவை சேர்ந்த சபரி (22) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறிக்க முயன்றார். இது குறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டவுன் போலீசார் வழக்கு பதிவு சபரியை இன்று கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருநெல்வேலி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <


