News January 10, 2026
புதுச்சேரி: டிரைவர் தீக்குளித்து தற்கொலை

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
புதுச்சேரி: புதிய ‘விட்டாபிளஸ்’ பால் அறிமுகம்

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ சேர்க்கப்பட்ட விட்டாபிளஸ் டோன்ட் பாலை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த கொழுப்பு கொண்ட இந்த பால், அரை லிட்டர் பாக்கெட் ரூ.24 என விற்பனைக்கு வருகிறது. பாண்லே நிறுவனம் பால், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
News February 7, 2026
புதுச்சேரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..!


