News January 10, 2026
விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்குக: தேமுதிக

விஜயகாந்த் இறந்த பிறகு கடலூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், தொண்டர்களின் எழுச்சி அதிகமாக இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 6, 2026
தேமுதிகவின் கூட்டணி முடிவு.. பிரேமலதா புதிய அறிவிப்பு

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்.17-ம் தேதிக்குள் அறிவிப்பேன் என பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பல தரப்பினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
சம்பாதிச்சா வரி கட்டித்தான் ஆகணும்: தமிழிசை

‘புலி’ பட வரி ஏய்ப்பு விவகாரத்தில் விஜய்க்கு விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை சென்னை HC உறுதி செய்துள்ளது. இது விஜய்யின் முறைகேட்டை காட்டுகிறது என விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், சம்பாதித்தால் வரி செலுத்திதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்தால் எல்லா விமர்சனங்களையும் தாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
News February 6, 2026
ரெப்போ வட்டி என்றால் என்ன தெரியுமா?

RBI-ன் ரெப்போ வட்டி 5.25% ஆக இருக்கும் நிலையில், வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி ஏன் அதிகமாக உள்ளது தெரியுமா? வங்கிகள், குறுகிய கால நிதி தேவைக்காக RBI-யிடம் வாங்கும் கடனுக்கு விதிக்கப்படுவதே ரெப்போ வட்டி(5.25%). ஆனால், வங்கிகள் வழங்கும் கடன்களில், ரெப்போ வட்டியுடன் செயல்பாட்டு செலவுகள், ஆபத்து, லாப விகிதம் போன்றவற்றையும் கூட்டுகின்றன. இதனால், லோன்களுக்கு கூடுதலாக நாம் வட்டி கட்டுகிறோம்.


