News May 4, 2024
நாமக்கல்லில் பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு 10 மணியளவில் 1008 வடைமாலை, பின்னர் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
Similar News
News October 28, 2025
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற (அக்.31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாமக்கல்: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் வருகிற அக்.31ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ’3 tier AC’ பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (அக்.29) புதன் இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.


