News May 4, 2024
வணிகர்களின் சிக்கல்களை களைய வேண்டும்

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் இன்றைய சூழலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுபட்ட குரலாகப் போராடும் வணிகர்களின் அனைத்து சிக்கல்களும் களைந்து, அவர்கள் வணிகத்தில் வளர்ச்சி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.
News December 9, 2025
நீதிபதிகளை திமுக பயமுறுத்த நினைக்கிறது: அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை பயமுறுத்துவதாகத்தான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 9, 2025
நடிகை வன்கொடுமை வழக்கு: பார்வதி அதிருப்தி

<<18502482>>நடிகை பாலியல் வன்கொடுமை<<>> வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை, நடிகை பார்வதி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். எது நீதி? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பார்வதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


