News May 4, 2024
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளை சமரசம் இன்றி சுட்டிக் காட்டும் சவுக்கு மீடியா மற்றும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதான வழக்குகளும், தொடர்ச்சியான கைதுகளும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 17, 2025
நெல்லை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சிதம்பர நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் தொடங்கும். விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி விளையாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
நெல்லையில் நான்கு நாட்கள் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப். 21, 26-28 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. தகுதி தேவையில்லை. பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் ரூ.8,200. விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இல் தொடர்பு கொள்ளவும்.
News September 17, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.