News May 4, 2024
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

போடி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் போடி புதூரைச் சோ்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு மது, முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸாா் மது மீது நேற்று (மே.3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 28, 2026
பெரியகுளம் அருகே கார்கள் மோதி விபத்து

பெரியகுளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன் தினம் பெரியகுளத்திலிருந்து குடும்பத்துடன் காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காட்ரோடு முனிஸ்வரன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதி நிலைதடுமாறிய விஜயகுமார் கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயகுமார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 28, 2026
தேனி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
பெரியகுளம்: தீ விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (21) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற பிரியதர்ஷினியை அவரது தாயார் வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக தனக்கு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.


