News January 9, 2026

கைலாசநாதர் ஆலயத்தில் கோ பூஜை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் இன்று சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பசு மீது பெண்கள் மஞ்சள் சந்தனம், குங்குமம் அரிசி உள்ளிட்ட பொருட்களால் அர்ச்சனை செய்ததுடன், சிவாச்சாரிகள் வேதங்கள் ஓத பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Similar News

News February 7, 2026

திருக்கோவிலூர் நபரால் பதறிய கள்ளக்குறிச்சி!

image

திருக்கோவிலூரைச் சேர்ந்த குப்பன் என்பவர் பிப்ரவரி 6-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் குப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News February 7, 2026

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

image

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்துாரைச் சேர்ந்த அஞ்சலி (27) என்பவருக்கு, கடந்த 2023-ல் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வரதட்சணை அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கணவர் பிரகாஷ் உட்பட 5 பேர் மீது 2 போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News February 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!