News January 9, 2026

காஞ்சிக்கு வந்தது அலெர்ட்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.10) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி மாவட்டத்திற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

காஞ்சிபுரத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

image

மேற்கு ராஜ வீதியில், கச்சபேஸ்வரர் கோயில் அருகே நிலத்தடி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு நாள் முழுக்க குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மண் அரிப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News February 4, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

படப்பை அடுத்த காவனூர் ஊராட்சி, திருத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(25). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் நண்பர் பிபின்(33), பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் கூத்தனூரில் உள்ள பஞ்சர் கடையில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனர். சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், பிபின், அபினாஷ் படுகாயமடைந்தனர்.

News February 4, 2026

உத்திரமேரூரில் 2 வாலிபர்கள் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலன்(17), கதிரவன்(23). செந்தூரப்பாண்டி(15). நேற்று முன் தினம், மூவரும் திருவிழா காண சென்று விட்டு பைக்கில் வயலூர் திரும்பினர். அப்போது பெருநகர் மானாமதி சாலையில் தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது பாலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று(பிப்.3) கதிரவனும் உயிரிழந்தார்.

error: Content is protected !!