News January 9, 2026

விருதுநகர்: 15 ஆண்டுகளுக்குப்பின் ஓருவர் கைது

image

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் 40. இவரை 2010 ல் வீடு புகுந்து மூன்றரை பவுன் நகை திருடிய வழக்கில் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 15, 2026

விருதுநகர்: அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் முன்னால் சென்ற பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற குராயூர் அருகே உள்ள மாசவணத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னாண்டி(46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.

News January 15, 2026

ராஜபாளையத்தில் இன்ஸ்பெக்டர் கைது

image

ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்யசீலா ஸ்ரீவியில் நடந்த கொலை வழக்கில் ராம்குமார் என்பவருடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்த மாலதி(35) என்பவர் தன்னிடம் 33 பவுன் நகையை மோசடி செய்ததாக அளித்த புகாரில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி ராம்குமார், சத்யசீலா ஆகியோர் மாலதியை மிரட்டிய நிலையில் சத்யசீலாவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!