News January 9, 2026
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

சிதம்பரம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கபிலன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி அடிக்கடி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவரது பெற்றோர் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கபிலன் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
கடலூர் அருகே அதிர்ச்சி: காய்கறி லாரியில் கடத்தல்…

சிதம்பரம் போலீசார் நேற்று (பிப்.2) பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் ஒன்றை சோதனை செய்த போலீசார், அதில் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டூவீலரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், காய்கறி லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 260 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 7 நபர்களை நேற்று கைது செய்தனர்.
News February 3, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.03) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
News February 3, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.03) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


