News May 4, 2024

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

image

மதுரையில் நாளை(மே 5) வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்ககங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை வழங்கம்போல் செயல்படும் என கோயம்பேடு பூ மார்க்கெட் து.தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

வெளிநாட்டு பறவைகள் சென்னை வருகை!

image

சென்னை அடையாறு நோக்கி வெளிநாட்டுப் பறவைகள் இன்று வந்துள்ளது. அழகாக காட்சியளிக்கும் கூவம் நதிக்கரையில் பறவைகள் பறந்து வருகிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த பறவைகளை அந்த பகுதியில் செல்பவர்கள் பார்த்து செல்கின்றனர்.

News December 8, 2025

இன்டிகோ – 71 விமானங்கள் ரத்து, பயணிகள் அவதி

image

சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமான சேவைகள் இன்று ஐந்தாவது நாளாக 71 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் வருகை விமானங்கள் 33, புறப்பாடு விமானங்கள் 38 ரத்து செய்யப்பட்டன. கவுகாத்தி, டில்லி, மும்பை, பூனா, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், அகமதாபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகை விமானங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியான ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

News December 8, 2025

சென்னை: தண்ணீர் தகராறில் நாயை ஏவி விட்ட கொடூரம்!

image

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3வது தெருவைச் சேர்ந்த தமிழ்வாணன் (59), நேற்று இரவு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த எழில் (38) தகராறில் ஈடுபட்டு, தனது நாயை ஏவி தமிழ்வாணனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மெரினா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!