News May 4, 2024
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென் தமிழக கடலோரங்களில் அதீத அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை இரவு வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகளை தூரத்தில் தள்ளி நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தில் Swell surge எனப்படும் அதீத அலைகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராஜமௌலி

வாரணாசி பட விழாவில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என ராஜமௌலி கூறியிருந்தார். இதனையடுத்து, அவரது பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனக்கு ராமரை பிடிக்காது, கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராமர் பிடிக்காது என்றால் அவர் பெயரில் படங்கள் எடுத்து ஏன் பணம் சம்பாதிக்கிறார்கள் என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News November 17, 2025
பிஹாரில் ஆதிக்கம் செலுத்தும் பெண் MLA-க்கள்

பிஹாரில் பெண் MLA-க்கள் ஆதிக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 26 பெண்கள் வெற்றிபெற்ற நிலையில், தற்போது 29-ஆக உயர்ந்துள்ளது. இதில், 26 பேர் NDA கூட்டணியை சேர்ந்தவர்கள். கடந்த முறை குற்றப் பின்னணி கொண்ட MLA-க்களின் எண்ணிக்கை 163-ஆக இருந்த நிலையில், இது இந்த முறை 130-ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பட்டதாரிகள் எண்ணிக்கை 149-லிருந்து 147-ஆக குறைந்துள்ளது.
News November 17, 2025
ஐயப்ப பக்தர்களுக்கு ₹500-ல் ஆன்மிக சுற்றுலா

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஆரியங்காவு, அச்சன்கோயில், பந்தளம், குளத்துப்புழை, குருவாயூர் உள்ளிட்ட 72 ஆன்மிக தலங்களை இணைக்கும் படியான சுற்றுலா திட்டத்தை KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபருக்கு ₹500 – ₹700 வரை மட்டுமே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பத்தனம்திட்டா, பம்பை பஸ் ஸ்டாண்ட்களில் பெறலாம்.


