News January 8, 2026
பணமில்லையா? மனமில்லையா? நயினார்

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18791380>>ஊதியம்<<>> வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு வாக்குறுதியை வீசி எறிந்ததோடு, ஊதியத்தையும் வழங்காமல் ஆசிரியர்களின் வாழ்வை பறிப்பது அராஜகமானது என்று அவர் சாடியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடத்தும் திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்க பணமில்லையா (அ) மனமில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 10, 2026
பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: காங்.,

மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய உயரிய அமைப்பாக உள்ள நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்துவதாக கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார். மாபெரும் தொகைகளை சேகரித்த மர்மமான PM CARES நிதி தொடர்பான கேள்விகளுக்கு, அவையிலேயே பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த நிதியின் விவரங்கள் குறித்து பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்… திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவோ கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. நெல்லை, குமரி பகுதிகளில் வலுவாக இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R.தனபாலன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
மதுரையில் 10 தொகுதிகளில் வெற்றிபெற பிடிஆர் ஐடியா

2026-ல் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றிபெற, கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் பிடிஆர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரை சிறப்பாக செய்தால் மட்டும் வெற்றிக்கு போதும் என நினைக்கக்கூடாது; வாக்கெடுப்பு அன்று தான் மிக தெளிவாக பணி செய்ய வேண்டும். பரப்புரை எந்த அளவுக்கு முக்கியமோ, வாக்கெடுப்பு அன்று கவனமாக செயல்பட்டால் 10 தொகுதியிலும் எளிதாக வெற்றிபெற முடியும் என கூறியுள்ளார்.


