News January 8, 2026
தேனி: ஓடும் பஸ்ஸில் 19 பவுன் நகை அபேஸ்..

வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் சுமிதா. இவா் நேற்று (ஜன.7) தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளாா். வீரபாண்டியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிப் பாா்த்த போது சுமிதாவின் பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
தேனியில் அஞ்சல் வணிக முகவராக வேண்டுமா? APPLY

தேனி தபால் துறையில் மத்திய அரசின் அஞ்சல், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிக முகவர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், சுய தொழில் முனைவோர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 99768 21104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தபால் துறையினர் தெரிவித்துள்ளனர்.
News February 4, 2026
தேனியில் 852 பேர் அதிரடி கைது

தேனி பள்ளிவாசல் தெரு பகுதியில் நேற்று (பிப்.3) அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 852 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.
News February 4, 2026
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று முன்தினம் (பிப்.2) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தௌபிக்கான் (29) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தௌபிக்கான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


