News January 8, 2026

அரியலூர்: ரூ.6.59 கோடி இணைய மோசடி

image

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு மாவட்டத்தில் 22 சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.6.59 கோடி இணைய மோசடி செய்யப்பட்டதில், ரூ.3.37 கோடி மதிப்பிலான பணம் வங்கி மூலம் முடக்கம் செய்யப்பட்டு, ரூ.1.04 கோடி மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை கூறியுள்ளது.

Similar News

News February 14, 2026

அரியலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 14, 2026

அரியலூர்: முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 11 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

News February 14, 2026

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்த கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

error: Content is protected !!