News January 8, 2026
மதுரை மக்களே வரும் காலத்தில் இது ரொம்ப அவசியம்.!

மதுரை மக்களே, விரைவில் வெயில் காலம் வரப்போகிறது. அந்த சமயத்தில் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் நமது வீடே சமையலறை போன்று இருக்கும். அந்த சமயம் யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லையா.? வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அவசர காலத்தில் 9498794987 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News February 8, 2026
மதுரை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

மதுரை மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
மதுரை அதிமுக பிரமுகர் கொலையில் பரபரப்பு தகவல்

சாமிநத்தத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான செந்தில்(35) நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் செந்தில் மனைவி காவியாவிற்கும், கார்த்திக் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் அதை செந்தில் கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதில் ஏற்கனவே 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று காவியா, கார்த்திகையும் கைது செய்தனர்.
News February 8, 2026
மதுரை: சாலையில் சென்றவர் மயங்கி விழுந்து பலி.!

பழங்காநத்தம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் போட்டோகிராபர் சிவகுமார்(48). சிறு வயது முதலே இளைப்பு நோய், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கீழவெளி வீதியில் இவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று தலை சுற்றி
கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் விசாரிக்கின்றனர்.


