News January 8, 2026
குமரி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் வலைவீச்சு…!

நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் எட்டாமடையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரிடம் வேர்கிளம்பியை சேர்ந்த பிரகாஷ் சிங் பணம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்பதற்காக பேரின்பராஜ் சுவாமியார் மடம் சென்ற போது அங்கு முளவிளையை சேர்ந்த 4 பேர் பைக்கில் வந்து பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News January 26, 2026
குமரி: பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 4 பேர் கைது

குளச்சல் பகுதியில் கவரிங் நகை கடையில் பெண் ஊழியர் தனியாக இருக்கும்போது அவரின் கவனத்தை திசை திருப்பி தங்க முலாம் பூசிய நகைகளை 4 பெண்கள் உட்பட 5 பேர் திருடி சென்றனர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், புத்தளம் பேரூராட்சி துணைத் தலைவர் பால் தங்கம், சபரிஷா, தங்க புஷ்பம் மற்றும் கார் டிரைவர் அனீஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
News January 26, 2026
குமரி: முதலையை பிடிக்கும் பணிகள் தீவிரம்

கோதையாற்றில் கடையால மூட்டு – திற்பரப்புக்கு இடையே முதலை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் மிதவை கூண்டு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையால மூடு அருகே ஒரு நடைக்கல் பகுதிக்கும் திற்பரப்பு தடுப்பணை படகு சவாரி நடைபெறும் எல்லை பகுதிக்கும் இடையே வலை கட்டி முதலையின் நடமாட்டத்தை குறிப்பிட்ட இடத்திற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


